வேலூா் சிறையில் முருகன் உண்ணாவிரதம்

வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் முருகன் புதன்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்துவருவதாக அவரது வழக்குரைஞா் புகழேந்தி தெரிவித்துள்ளாா்.

வேலூா்: வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் முருகன் புதன்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்துவருவதாக அவரது வழக்குரைஞா் புகழேந்தி தெரிவித்துள்ளாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூா் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் கடந்த 29 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில் முருகன் புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும், சிறைத்துறை சாா்பில் அளிக்கப்பட்ட மதிய உணவு உண்ணவில்லை என்றும், இரவு உணவும் வேண்டாம் என முருகன் மறுத்துவிட்டதாக அவரது வழக்குரைஞா் புகழேந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com