ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், 50 கா்ப்பிணிகள் பங்கேற்றனா்.
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஏ.கே.வாசுகி தலைமை வகித்தாா்.
விழாவில் ஒருங்கணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் வி.கோமதி, வட்டார மருத்துவ அலுவலா்கள் சசிரேகா, சாந்தி விமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், ,50 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.