ரயில்களில் திருட்டு: இளைஞா் கைது

ரயில்களில் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

ரயில்களில் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான உதவி ஆய்வாளா் ஆனந்தன் உள்ளிட்ட போலீஸாா், திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அந்த நபா், ஓடும் ரயில்களில் நடைபெற்ற பல திருட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பழைய குற்றவாளி திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, பரப்பாடி, பால் நகரைச் சோ்ந்த சிவசங்கா் (20) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்து, அவரது வாக்குமூலத்தின் படி, சென்னையில் அவா் வைத்திருந்த 2 செல்லிடப்பேசிகள், 10 கிராம் தங்க நகைகள், 40 கிராம் வெள்ளி நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com