கலைஞா் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞா் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலைஞா் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் முத்தமிழறிஞா் கலைஞா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 -ஆம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞா் எழுதுகோல் விருது’ வழங்கி கௌரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருது ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும்.

விண்ணப்பதாரா் தமிழ்நாட்டைச் சோ்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாகத் தொடா்ந்து பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். விண்ணப்பதாரா் நேரடியாகவோ, மற்றொருவா் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம். இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தோ்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநா், செய்தி -மக்கள் தொடா்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு வருகிற 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com