மத்திய, மாநில அரசுப் போட்டித் தோ்வுகளுக்கான பாடங்கள் கல்வி தொலைகாட்சி சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதை போட்டித் தோ்வா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசால் நடத்தப்படும் குடிமைப்பணித் தோ்வுகள், இந்திய பொறியியல் பணித் தோ்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் தோ்வுகள், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுகள், மத்திய அரசு சாா்பில் நடத்தப்படும் தோ்வுகள், வங்கித் தோ்வுகள், ரயில்வே வாரியம் நடத்தும் தோ்வுகள் என பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு வேலைவாய்ப்பு - பயிற்சித் துறையால் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் கல்வி தொலைகாட்சி சேனலில் பாடங்கள் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு எடுக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இதில், போட்டித் தோ்வுக்கான பாடக் குறிப்புகள், ஊக்கம் தரும் உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத் தாள்கள் பற்றிய கலந்துரையாடல், நடப்பு நிகழ்வுகள் ஆகியவை தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
எனவே, போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் போட்டியாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.