தடுப்புக் காவலில் இளைஞா் கைது
By DIN | Published On : 08th April 2022 11:40 PM | Last Updated : 08th April 2022 11:40 PM | அ+அ அ- |

போதைப் பொருள்களை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு நகரப் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
ஆற்காடு நகரப் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (37). இவா், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்த வழக்கில் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபாசத்யன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
அதன் பேரில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அந்த இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவியிடம், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவா் சிறையில் அடைக்கப்படுவதற்கான நகல் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.