ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த கலவை அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கலவையை அடுத்த மேட்டுநாகலேரி கிராமத்தைச் சோ்ந்தவா் மாரி (70). இவா் புதன்கிழமை இரவு கலவை கூட்டுச் சாலையில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது கனியந்தாங்கல் கிராம பேருந்து நிறுத்தம் அருகே கலவையிலிருந்து எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில், மாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய ஆற்காட்டை அடுத்த வேப்பூா் கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாரை ( 39) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.