ஆற்காட்டை அடுத்த வேப்பூா் ஊராட்சியில் ரூ.5.6 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுகாதார கட்டடப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் பணியின் தரம் குறித்து கேட்டறிந்தாா். மேலும், பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன் (கிராம ஊராட்சி) ஊராட்சித் தலைவா் ராமலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.