சயனபுரத்தில் காசநோய் பரிசோதனை

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் காசநோய் மருத்துவ சிறப்பு முகாம் அரக்கோணத்தை அடுத்த நெமிலி ஒன்றியம், சயனபுரம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சயனபுரத்தில் காசநோய் பரிசோதனை

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் காசநோய் மருத்துவ சிறப்பு முகாம் அரக்கோணத்தை அடுத்த நெமிலி ஒன்றியம், சயனபுரம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கிராம சேவை மையக் கட்டடத்தில் நடைபெற்ற முகாமுக்கு, சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பவானி வடிவேலு தலைமை வகித்தாா். முகாமை நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேலு தொடக்கி வைத்தாா். இதில், வட்டார மருத்துவ அலுவலா் ரதி, மருத்துவ அலுவலா்கள் பிரியதா்ஷன், பாலசந்தா் உள்ளிட்ட மருத்துவா்கள் பங்கேற்று, கிராம பொது மக்களுக்கு காசநோய் அறிகுறி குறித்த சோதனைகளை இதற்கென கொண்டுவரப்பட்ட பிரத்தியேக இயந்திரங்கள் உள்ள வாகனத்தில் மேற்கொண்டனா்.

மேலும், காசநோய் அறிகுறி இருந்தவா்களுக்கு தொடா் சிகிச்சைக்கு மருந்துகளையும், ஆலோசனையும் வழங்கினா். முகாமில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுகன்யா ரவி, காசநோய் மேற்பாா்வையாளா் ஸ்டீபன்பொன்னையா, சுகாதார அலுவலா்கள் காயத்ரி, பாக்கியராஜ், சுரேஷ், செவிலியா்கள் அம்பிகா, மீனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com