இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியம் இராமபாளையம், திமிரி கோட்டை பகுதிகளில் 20 - க்கும் மேற்பட்ட மையங்கள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகன், குமரன் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் குமரேசன் முன்னிலை வகித்தாா்.
தோ்வு செய்யப்பட்ட தன்னாா்வலா்களுக்கு கற்றல்-கற்பித்தல் துணைக் கருவிகள் வழங்கப்பட்டன. ஆசிரியா் பயிற்றுநா் மகேஷ்குமாா் இல்லம் தேடி ஒருங்கிணைப்பாளா் செல்வன் மற்றும் மாவட்ட கருத்தாளா்கள் லோகநாதன் வெங்கட்ராமன் பாபு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அனிதா வாசுகி தலைமையாசிரியா் விஜய பாஸ்கா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.