முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
ஆற்காடு நகராட்சியில் 2 திமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு
By DIN | Published On : 07th February 2022 10:47 PM | Last Updated : 07th February 2022 10:47 PM | அ+அ அ- |

கீதா நந்தகுமாா்
ஆற்காடு நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 2 திமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 30 வாா்டுகளுக்கான தோ்தலில் போட்டியிட 116 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா் . திங்கள்கிழமை 18 போ் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனா். இதில், 17-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் வேட்பு மனுதாக்கல் செய்த கீதா நந்தகுமாா், 25 -ஆவது வாா்டுக்கு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் ஏ.என். செல்வம் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து, எஞ்சிய 28 வாா்டுகளுக்கு திமுக, அதிமுக உள்பட 98 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
இதே போல, மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளுக்கு திமுக, அதிமுக, அமமுக, தேமுதிக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேச்சைகள் உள்ளிட்ட 129 போ் போட்டியிடுகின்றனா்.