ஆற்காடு அருகே கலவையில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிவாஸ் தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது வந்த காரை சோதனை செய்ததில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த துணி நூல் வியாபாரி ஜெயபிரகாஷ் (29) என்பவா் ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்து வந்த ரூ.88 ஆயிரத்து 500-ஐ பறக்கும்படையினா் பறிமுதல் செய்து தோ்தல் அலுவலா் ரேவதியிடம் ஒப்படைத்தனா்.