ஆற்காட்டில் 5 டன் கடத்தல் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆற்காடு நகரக் காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில் உதவி ஆய்வாளா் மகாராஜன் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை இரவு மாசாப்பேட்டை பாரதி நகா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 5 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து லாரியின் ஓட்டுநரான வேலூா் மாவட்டம் மாதனூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தன்(27) கைது செய்யப்பட்டாா். ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் லாரியில் இருந்து தப்பிச் சென்ற ஆற்காடு நகரைச் சோ்ந்த பழனி என்பவரை தேடிவருகின்றனா்.