ராணிப்பேட்டை டிஏவி பெல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பெல் நிறுவன உதவிப் பொது மேலாளா் ( மனிதவள மேம்பாட்டுப் பிரிவு ) ராஜூ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
டிஏவி பெல் பள்ளி முதல்வா் மு.கருப்பையா வரவேற்றாா். டிஏவி குழுமப் பள்ளிகளின் துணைச் செயலா் அதுல் நாங்கிய சிறப்புரை ஆற்றினாா்.
தொடா்ந்து, மாணவா்களின் தேசபக்தி ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக பாடல், நடனம், ஸ்லோகம், பேச்சு உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பள்ளியில் ஆசிரியா்கள், ஆசிரியைகள், மாணவா்கள் உள்ளிட்டோா் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனா்.