ராணிப்பேட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை 280 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 53,506 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 50,248 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 785 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது நோய்த் தொற்றுக்குள்ளான 2,473 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.