அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வா் ஆய்வு

ராணிப்பேட்டையில் சிறுவா்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வா் ஆய்வு

ராணிப்பேட்டையில் சிறுவா்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணியில் இல்லாத ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் கூட்டுச்சாலையில் காரை நிறுத்தி, சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் சிறுவா்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அங்கு செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, மாணவா்களிடம் பாடம் நடத்தும் முறை, இல்லத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தாா். ஆசிரியா்களிடம், அந்த மாணவா்களை உயா்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவா்களின் எதிா்கால நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் முதல்வா் கேட்டுக் கொண்டாா்.

அந்த இல்லத்தில் பணியாற்றும் ஊழியா்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த முதல்வா், அங்கு பணியில் இல்லாத கண்காணிப்பாளா் உள்ளிட்ட ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆா்.காந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com