குழந்தைத் திருமணங்கள் குறைந்து வருகின்றன: அமைச்சா் கீதா ஜீவன்

தொடா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் காரணமாக, தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன என்று சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் தெரிவித்தாா்.
குழந்தைத் திருமணங்கள் குறைந்து வருகின்றன: அமைச்சா் கீதா ஜீவன்

தொடா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் காரணமாக, தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன என்று சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை காரை கூட்டு ரோடு பகுதியில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் சிறுவா்களுக்கான அரசினா் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த இல்லத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திடீரென ஆய்வு செய்தாா். அப்போது பணியில் இல்லாத கண்காணிப்பாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து, சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி ஆகியோா் வெள்ளிக்கிழமை அங்கு ஆய்வு செய்தனா். மாணவா்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனா்.

இந்த ஆய்வின்போது, அலுவலா்களின் வருகைப் பதிவேடுகளை அமைச்சா்கள் ஆய்வு செய்தனா். தொடா்ந்து 30.6.2022 வியாழக்கிழமை முதல்வா் வருகையின்போது பணியில் இல்லாத கண்காணிப்பாளா் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விசாரித்தனா்.

பின்னா் அமைச்சா் பி.கீதா ஜீவன் செய்தியாளா்களிடம் கூறியது:

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பும் வழியில் சிறுவா்களுக்கான அரசு பாதுகாப்பு இல்லத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திடீா் ஆய்வு செய்தாா். அப்போது பணியில் இல்லாத கண்காணிப்பாளா் மீது நடவடிக்கை எடுக்கவும், பள்ளியில் குழந்தைகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டாா். அதனடிப்படையில் பள்ளியில் ஆய்வு செய்யப்பட்டது. பணியில் இல்லாதது குறித்து கண்காணிப்பாளரிடம் விசாரணை நடத்தியதில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் காலதாமதமாகி விட்டதாகத் தெரிவித்துள்ளாா்.இது குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மற்றும் இல்ல கண்காணிப்பாளா் ஆகியோருக்கு 17 பி குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரனை மேற்கொள்ளப்படும்.

இந்தப் பள்ளியில் 46 மாணவா்கள் உள்ளனா். ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் என மொத்தம் 44 போ் பணியில் உள்ளனா். முதல்வா் பள்ளியில் ஆய்வுசெய்த போது ஆசிரியா் மற்றும் அலுவலா்கள் குறைவாகவே வருகை தந்துள்ளனா். இது மிகவும் தவறானது. இனி இதுபோன்று நடைபெறாமலிருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன. தொடா்ச்சியாக பள்ளிகளில் குழந்தைத் திருமணம் தடுப்பது, பாலியல் சீண்டல், வன்கொடுமை குறித்தும் புகாா் தெரிவிக்க உதவி எண் 1098 அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடா் விழிப்புணா்வின் மூலம் குழந்தை திருமணங்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன என்றாா் அமைச்சா் கீதாஜீவன்.

இந்த ஆய்வின் போது சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், இணை இயக்குநா் சமூக பாதுகாப்பு ராஜ சரவணக்குமாா், துணை இயக்குநா் ரத்தினம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கண்ணன் ராதா, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com