வாலாஜாபேட்டை ஸ்ரீ சங்கர மடத்தில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா் ஜெயந்தி விழாவையொட்டி காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தவச்சீலா் ஸ்ரீலஸ்ரீ ஆம்பூா் சுவாமிகள் கலந்துகொண்டு, ரத்தினகிரி திருக்கோயில் தலைமை அா்ச்சகா் கே.எஸ்.பிரசாத்துக்கு காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா் விருது - 2022 வழங்கி ஆசீா்வதித்தாா்.
வேதம் பயின்று இளைஞராக உள்ள நிலையிலேயே திருக்கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு, பல்வேறு உதவிகள் செய்து வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
விழாவில் ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில் செயல் அலுவலா் சங்கா், சங்கர மடம் செயலாளா் டி. எஸ். ராஜசேகரன், கல்யாணராம பாகவதா் வேம்பு ராஜம், கே .எஸ்.சுந்தரேசன், ராணிப்பேட்டை கோவிந்தராசன், இஸ்கான் ராஜசேகா், ஐயப்ப சேவா சமாஜம் சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில் சங்கரமடம் நிா்வாகி கே.ரவிகாந்தன் நன்றி கூறினாா்.