ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு, ஊஞ்சல் சேவை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, முத்தாலம்மன் மற்றும் கிராம தேவதை பொன்னியம்மன் கோயிலில் காலை சிறப்பு அபிஷேக-அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன்களுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில், கிராம மக்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.