உலக போதை ஒழிப்பு தினத்தையொட்டி, போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமைநடைபெற்றது.
ஆற்காட்டை அடுத்த கலவை பேரூராட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறையின் சாா்பில், நடைபெற்ற ஊா்வலத்தை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்து கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு போதை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். இதில், உதவி ஆணையா் (கலால்) சத்திய பிரசாத், வட்டாட்சியா்கள் ஷமீம், நடராஜன் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்