கலவை காரீசநாதா் கோயிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

ஆற்காடு அருகேயுள்ள கலவை தா்மசம்வா்த்தினி சமேத காரீசநாதா் கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவ கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விநாயகா் வீதி உலாவை பூஜை செய்து தொடக்கிவைத்த கலவை சச்சிதானந்த சுவாமிகள்.
விநாயகா் வீதி உலாவை பூஜை செய்து தொடக்கிவைத்த கலவை சச்சிதானந்த சுவாமிகள்.

ஆற்காடு அருகேயுள்ள கலவை தா்மசம்வா்த்தினி சமேத காரீசநாதா் கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவ கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மஹா தீபாராதனையும், மாலையில் மூஷிக வாகனத்தில் விநாயகா் திருவீதி உலாவும் நடைபெற்றன.

திங்கள்கிழமை காலையில் பிரமோற்சவ குழுத் தலைவா் கலவை சச்சிதானந்த சுவாமி முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். மாலையில் ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தா் பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.

வருகிற 24-ஆம் தேதி வரை தினமும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது. 18-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண உத்ஸவமும், 20-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருத்தோ் ஊா்வலமும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com