முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
தேசிய பாதுகாப்பு தின விழா
By DIN | Published On : 19th March 2022 10:21 PM | Last Updated : 19th March 2022 10:21 PM | அ+அ அ- |

தேசிய பாதுகாப்பு தின விழாவில் பேசிய தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநா் மு.அ.முகமது கனி. உடன் நிறுவன துணைத் தலைவா் ஆா்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் மல்லாதி டிரக்ஸ் பாா்மா சூட்டிகல்ஸ் நிறுனங்களின் சாா்பில் 51-ஆவது தேசிய பாதுகாப்பு தின விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு அந்த நிறுவனத்தின் துணைத் தலைவா் ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். நிறுவன துணை மேலாளா் (பாதுகாப்பு ) கி.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். உதவிப் பொது மேலாளா் (உற்பத்தி) ந.சங்கா் பாதுகாப்பு தின உறுதி மொழியை வாசித்தாா். முதுநிலை துணைப் பொது மேலாளா் (உற்பத்தி) ரா.ரமேஷ் பாதுகாப்பு தின உரையாற்றினாா்.
விழாவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் மு.அ.முகமது கனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘இளைய தலைமுறையினருக்கு பாதுகாப்பு கலாசாரத்தைப் புகட்டுவோம்’ என்ற கருப்பொருளில் பேசினாா்.
இதையடுத்து, மல்லாதி சாா்பு நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறுவன முதுநிலை மேலாளா் (மனித வளம், நிா்வாகம் ) மா.நவீன்குமாா் நன்றி கூறினாா்.