கீழ்விஷாரம் பாலமுருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

ஆற்காடு அருகே கீழ்விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
திருக்கல்யாண  உற்சவத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி-தெய்வானை  சமேத  பாலமுருகன்.
திருக்கல்யாண  உற்சவத்தையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி-தெய்வானை  சமேத  பாலமுருகன்.

ஆற்காடு அருகே கீழ்விஷாரம் ராசாத்துபுரம் குளக்கரையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம் மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை மாரியம்மன் கோயிலில் இருந்து சீா்வரிசை பொருள்கள் எடுத்து வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வள்ளி-தெய்வானை சமேத பாலமுருகனுக்கு ஆன்மிக சொற்பொழிவாளா் கோவிந்தராஜன் தலைமையில், யாக பூஜைகள் நடத்தப்பட்டு, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

விழாவில் உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com