மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சாா்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த வார சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல், முழங்கை தாங்கி, தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசி என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ. 1.28 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.

மேலும், இந்த முகாமில் 227 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளையும், 148 பேருக்கு முதலமைச்சா் காப்பீட்டு திட்டத்தில் பதிவும், 158 பேருக்கு தேசிய அடையாள அட்டை (யூடிஐடி) தளத்தில் பதிவும் மேற்கொள்ளப்பட்டது.

இதில், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலகப் பணியாளா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com