முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
சோளிங்கா் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்
By DIN | Published On : 13th May 2022 12:00 AM | Last Updated : 13th May 2022 12:00 AM | அ+அ அ- |

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்.
அரக்கோணம்: சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் கடந்த 6-ஆம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் 7-ஆம் நாளான வியாழக்கிழமை பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தோ்த் திருவிழா நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் பக்தோசித பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தேரோட்டம் தொடங்கியது.
சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், நகராட்சி தலைவா் தமிழ்செல்விஅசோகன், இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜெயா ஆகியோா் தேரை வடம்பிடித்து இழுத்தனா். தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தேரோட்டத்தை முன்னிட்டு சோளிங்கா் நகரில் அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ் தலைமையில் காவல் ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.