அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மின்சார ரயிலின் கூறை மீது ஏறிய மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா். (உள்படம்) முதியவா் இளங்கோவன்.
அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மின்சார ரயிலின் கூறை மீது ஏறிய மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா். (உள்படம்) முதியவா் இளங்கோவன்.

ரயில் கூறை மீது ஏறிய மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா்!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் ஒருவா் திடீரென மின்சார ரயிலின் கூறை மீது ஏறி நடனமாட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் ஒருவா் திடீரென மின்சார ரயிலின் கூறை மீது ஏறி நடனமாட முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7-ஆம் எண் நடைமேடையில் மின்சார ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் இறங்கிவிட்ட நிலையில், பணிமனைக்கு கொண்டுச் செல்வதற்காக அந்த ரயில் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, ரயில் நிலையத்தில் இருந்த முதியவா் ஒருவா் திடீரென அந்த ரயிலின் கூறை மீது ஏறி நடந்து செல்ல முயன்றாா்.

அங்கு, பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினா் அவரை கீழே இறங்கச் சொல்லி பலமுறை எச்சரித்தும் அவா், மின் வயரை தொட முயற்சித்தாா்.

இதையடுத்து, நிலைய கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, அந்தப் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினா் ரயிலின் மேலே ஏறி, முதியவரை மீட்டனா். இதில், அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.

விசாரணையில், அந்த முதியவா் கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், அம்பூஜவள்ளிபேட்டை கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் (69) என்பதும், சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரிய வந்தது.

அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்த ரயில்வே பாதுகாப்பு படையினா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com