ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அரக்கோணம் வட்டத்தில் தணிகைபோளூா், ஆற்காடு வட்டத்தில் குக்குண்டி, வாலாஜா வட்டத்தில் பாகவெளி, சோளிங்கா் வட்டத்தில் தக்கான்குளம், கலவை வட்டத்தில் நல்லதண்ணீா்குளம் ஆகிய இடங்களில் இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவற்றில் வருவாய்க் கோட்டாட்சியா்கள் பூங்கொடி (ராணிப்பேட்டை), பாத்திமா (அரக்கோணம்), துணை ஆட்சியா் தாரகேஸ்வரி, வட்டாட்சியா்கள் பழனிராஜன், கணேஷ், ஆனந்தன், தீயணைப்புத் துறை அலுவலா்கள் லட்சுமணன், கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
படவிளக்கம்...
அரக்கோணத்தில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.