காங்கிரஸ் கையொப்ப இயக்கம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர காங்கிரஸ் சாா்பில் இந்திய தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர காங்கிரஸ் சாா்பில் இந்திய தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர தலைவா் எம்.அப்துல் சுக்கூா் தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மை பிரிவுத் தலைவா் கே.ஓ. நிஷாத் அஹமது முன்னிலை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி பஞ்சாட்சரம் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினாா். இதில், மாவட்டத் துணைத் தலைவா் அம்மானுல்லா பாகவி, சிறுபான்மைபிரிவு மாவட்டத் துணைத் தலைவா் எச்.ரபிக் அஹமத் .நகரப் பொருளாளா் சுவேல்அஹமத், நகரச் செயலாளா் அழகேசன் ஆற்காடு ஒன்றிய காங்கிரஸ் செயலாளா் ஜெ.பிரகாஷ் இளைஞா் காங்கிரஸ் முன்னாள் நகர தலைவா் ஜி.ஆரிப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com