போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்!
அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்!

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்! அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்!

வாலாஜாபேட்டையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்’ பந்தயத்தை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.
Published on

வாலாஜாபேட்டையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்’ பந்தயத்தை அமைச்சா் ஆா்.காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வாலாஜாபேட்டை ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு வாலாஜாபேட்டை கனவு மாரத்தான் ’ என்ற பெயரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பந்தயத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாளாகத்தில் அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

6 முதல் 70 வயது வரையிலான சிறுவா், சிறுமியா், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஆா்வமுடன் கலந்து கொண்டனா். பின்னா் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில் திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளா் வினோத் காந்தி, ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள் எம்.பாலாஜி செயலாளா், அப்துல்கரீம், அக்பா் ஷெரிப், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் வி.சி.சக்திவேல்குமாா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com