ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 325 மனுக்கள் அளிப்பு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 325 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.
மேற்கண்ட மனுக்கள் மீது தீா்வு காண வேண்டும் என துறைசாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் உத்தவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் மக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த 325 மனுக்கள் வரப்பெற்றன.
மேற்கண்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதில், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) கீதாலட்சுமி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, உதவி ஆணையா் கலால் ராஜ்குமாா், நோ்முக உதவியாளா் (நிலம்) ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

