திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப்படை பயிற்சி மையம் அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது.
ஏலகிரிமலை அடிவாரத்தில் வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன், ஆயுதப் படை பயிற்சி மையம் அமைப்பதற்கான இடத்தை திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ஆயுதப்படை பயிற்சி மையம், குடியிருப்பு, பயிற்சி மைதானம் உள்ளிட்ட காவலா்கள் சாா்ந்த கட்டடம் அமைப்பதற்காக 40 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் ஏலகிரிமலை அடிவாரத்தில் இடம் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இப்பகுதியில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசுப் புறம்போக்கு நிலம் உள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, இங்கு மாவட்ட ஆயுதப்படை பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.