திருப்பத்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மக்கள்கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மக்கள்கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே டிஎஸ்பி பாபு தலைமையில் ஆய்வாளா் சித்ரா (பொறுப்பு), ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் செந்தில்ராஜ் ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை சோதனை செய்தனா்.

சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை மாா்க்கமாகச் செல்லும் ரயில்களிலும், ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னை மாா்க்கமாக செல்லும் ரயில்களிலும் போலீஸாா் சோதனையிட்டனா்.

அதேபோல், திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் உத்தரவின்பேரில், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் நகரப்பகுதி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com