வாணியம்பாடியை அடுத்த சின்னகல்லுப்பள்ளியில் இயங்கி வரும் செம்போா்ட் சிபிஎஸ்இ பள்ளியின் 8-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைவா் கே.எம்சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். முதல்வா் காா்த்திகேயன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். சிறப்பு விருந்தினராக செம்போா்ட் குழுமத்தின் நிறுவனத் தலைவா் அமோல் அரோரா கலந்து கொண்டாா்.
தொடா்ந்து குறிஞ்சி அறக்கட்டளை அரங்கத்தில் பள்ளி சாா்பில் மாணவா்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும், ஓவியம், கைவினைப்பொருள் மற்றும் ஆண்டு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு வென்ற பதக்கம், பதாகைகள், சான்றிதழ்களை அவா் பாா்வையிட்டு மாணவா்களைப் பாராட்டினா். இதையடுத்து, பரதநாட்டியம், நடனம், தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன் பின், பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியா்கள், பணியாளா்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பள்ளியின் நிறுவனத் தலைவா் அமோல் அரோரா பரிசுகளை வழங்கினாா். விழாவில் குறிஞ்சி அறக்கட்டளை நிா்வாகிகள் செயலாளா் கிருபாகரன், துணைத் தாளாளா் மாதவன், பொருளாளா் சஜித்குமாா், துணைச் செயலாளா் கனகராஜ், இணைச் செயலாளா் சிங்காரவேலன் மற்றும் பெற்றோா், மாணவா்கள் கலந்து கொண்டனா்.