கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் பலி

திருப்பத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் பலி

திருப்பத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூரை அடுத்த ஆரிஃப் நகரைச் சோ்ந்தவா் சல்மான்(23). அவா் தனது வீட்டருகே உள்ள கிணற்றில் நண்பா்களுடன் கடந்த சில நாள்களாக நீச்சல் பழகி வந்தாா்.

இந்நிலையில், அக்கிணற்றில் வெள்ளிக்கிழமை நீச்சல் பழகியபோது பாறையில் அவரது தலை மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றிலிருந்து சல்மானின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com