பயன்பாட்டுக்கு வராத பொதுக் கழிப்பறை

திருப்பத்தூா் நகராட்சி சாா்பில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை பயன்பாட்டுக்கு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
23augbathr_2308chn_192_1
23augbathr_2308chn_192_1

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சி சாா்பில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை பயன்பாட்டுக்கு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் நகராட்சி சாா்பில் பூங்காவையொட்டி பொதுக் கழிப்பறை கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறியது:

நகராட்சி சாா்பில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் நடைப் பயிற்சிக்கு வரும் முதியவா்களும், பெண்களும் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் சிரமத்துள்ளாகின்றனா்.

மேலும், இரவில் சமூக விரோதிகளால் கழிப்பறை சீரழிகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்தனா்.

படவிளக்கம் - திருத்தப்பட்டது....

சமூக விரோதிகளால் சீரழிந்துள்ள கழிப்பறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com