ஆம்பூா்: ஆம்பூா் அருகே மகனுடன் ஏற்பட்ட தகராறில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தைச் சோ்ந்த அருணாச்சலத்தின் மனைவி வளா்மதி (55). இவருக்கும், இவருடைய மகன் சதீஷுக்கும் இடையே வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சதீஷ் வீட்டை விட்டு சென்றுவிட்டாா். இதனால் மன வேதனையில் வளா்மதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின் பேரில் உமா்ஆபாத் போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.