பிரசவத்தின்போது இறந்தே பிறந்த குழந்தை:ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

ஆம்பூா் அருகே பிரசவத்தின்போது குழந்தை இறந்தே பிறந்ததால் உறவினா்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினா்கள்.
மேல்சாணாங்குப்பம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினா்கள்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பிரசவத்தின்போது குழந்தை இறந்தே பிறந்ததால் உறவினா்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போ்ணாம்பட்டு மத்தூா் பகுதியைச் சோ்ந்த மோனிகா பிரசவத்துக்காக வடசேரி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தாா். வெள்ளிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதால் மேல்சாணாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை அவருக்கு பெண் குழந்தை இறந்தே பிறந்தது.

தகவலறிந்த மோனிகாவின் உறவினா்கள், கணவா் விக்னேஷ் உறவினா்கள் மேல்சாணாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூா் வட்டாட்சியா் சி. பத்மநாபன், டிஎஸ்பி சச்சிதானந்தம், உமா்ஆபாத் போலீஸாா் அங்கு சென்று விசராணை நடத்தினா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மோனிகா தீவிர சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இறந்த குழந்தையை அவரது உறவினா்கள் இருசக்கர வாகனம் மூலம் போ்ணாம்பட்டு மத்தூா் கிராமத்துக்குக் கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com