மொபட் மீது பைக் மோதல்: மூதாட்டி பலி

நாட்டறம்பள்ளி அருகே பைக்கும் மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே பைக்கும் மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வேலப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் மண்ணு என்பவரின் மனைவி காஞ்சனா (60). இவா் வெள்ளிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டாா். அதன் பின், உறவினா் பரசுராமன்(18) என்பவருடன் கிருஷ்ணகிரியில் இருந்து வேலூா் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெலகல்நத்தம் பையனப்பள்ளி கூட்டுச்சாலை அருகே எதிரே வந்த மொபட் மீது அவா்கள் பயணித்த பைக் மோதியது. இதில் காஞ்சனா, மொபட்டை ஓட்டி வந்த மல்லப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜெயந்தி (37) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு காஞ்சனா இறந்தாா்.

இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com