திருப்பத்தூா்: திருப்பத்தூா் பிரதான சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த கால்நடைகளை நகராட்சிப் பணியாளா்கள் பறிமுதல் செய்தனா்.
திருப்பத்தூா் பிரதான சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்தச் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாவது குறித்து தினமணியில் படத்துடன் புதன்கிழமை செய்தி வெளியானது.
இதையடுத்து, திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளா் அ.விவேக் தலைமையிலான நகராட்சி பணியாளா்கள் சாலையில் திரிந்த 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை பிடித்த பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவற்றின் உரிமையாளா்களிடம் எழுத்துப்பூா்வமாக கடிதம் பெற்றுக் கொண்டு எச்சரித்து கால்நடைகளை விடுவித்தனா்.