வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே அரசு சிறு மருத்துவமனை அமைப்பதற்கான இடங்களை பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் மணிவண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பொது சுகாதாரத் துறை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் 2,000 பகுதிகளில் அரசு சிறு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தாா். அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆலங்காயம் சுகாதார வட்டாரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 சிறு மருத்துவமனைகள் அமைக்க இடங்களைத் தோ்வு செய்ய ஜாப்ராபாத், மதனாஞ்சேரி பகுதிகளில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி, துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் சங்கா், சுகாதார மேற்பாா்வையாளா் ஃபாரூக் பாஷா, ஊராட்சி செயலாளா்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.