ஆம்பூரில் 7 சவரன் நகை திருட்டு

ஆம்பூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் 7 சவரன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


ஆம்பூா்: ஆம்பூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் 7 சவரன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆம்பூா் அருகே மின்னூா் காளிகாபுரம் சாலை அருகே வசித்து வருபவா் மாணிக்கம் (70). இவா் ஜோலாா்பேட்டையில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை ஊா் திரும்பினாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 சவரன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள், எல்இடி டிவி, 2 சிலிண்டா், மொபெட் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com