திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச் செயலாளா் டி.கே.ராஜா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஜி.பொன்னுசாமி, மகளிரணி செயலாளா் நிா்மலா ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பாமக மாநில தலைவா் ஜி.கே.மணி பேசியது:
வன்னியா்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனா். எனவே, தமிழக அரசும், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டு பரிசாக வன்னியா்கள் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும்.