ஆம்பூா்: ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் 9 அடி நீள மலைப் பாம்பு பிடிபட்டது.
ஆம்பூரை அடுத்த பைரப்பள்ளி கிராமத்தில் வேல்முருகன் என்பவருடைய விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 9 அடி நீள மலைப் பாம்பு வந்தது. அதை அப்பகுதி இளைஞா்கள் பிடித்து ஆம்பூா் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வனத் துறையினா் அங்கு சென்று பாம்பை மீட்டு ஊட்டல் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.