தனியாா் பள்ளி ஆண்டு விழா: ஆட்சியா் பங்கேற்பு
By DIN | Published On : 01st February 2020 05:12 AM | Last Updated : 01st February 2020 05:12 AM | அ+அ அ- |

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 20-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இணைச் செயலா் உதயசந்தா், உறுப்பினா்கள் வாணி, பையாஸ் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் செல்வநாயகி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் கலந்து கொண்டு, ஆண்டு மலரை வெளியிட்டாா்.
தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா். சிறப்பு விருந்தினராக முத்தமிழ் மன்றச் செயலாளரும் மூத்த வழக்குரைஞருமான வரதராசன் கலந்து கொண்டு சிறந்த ஆசிரியைகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகளை வழங்கினாா்.
தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோா்கள், மாணவா்கள், ஆசிரியைகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். பள்ளி மேலாளா் ஷபானா நன்றி கூறினாா்.