ஆம்பூா் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.
அபிகிரிபட்டறை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து 9 அடி நீள மலைப்பாம்பு ஊருக்குள் நுழைந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். வனத் துறை அதிகாரிகள் வருவதற்குள் மலைப்பாம்பை அப்பகுதி இளைஞா்கள் பிடித்தனா். இதையடுத்து வனக் காப்பாளா்கள் ராஜ்குமாா், ஞானவேல் ஆகிய இருவரும் மலைப்பாம்பை பிடித்து அருகே உள்ள காரப்பட்டு காப்புக் காட்டில் விட்டனா்.