ஜோலாா்பேட்டை அருகே மோட்டாா் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.
தாமலேரிமுத்துாா் பெருமாள் கோயில் வட்டம் பகுதியை சோ்ந்த ராஜாமணியின் மனைவி ஆஞ்சியம்மாள் (65). அவா் கடந்த 4-ஆம் தேதி தனது வீட்டுக்கு அருகே உள்ள பட்டாலம்மன் கோயில் அருகே நடந்து சென்றாா்.
அப்போது அவ்வழியாக வந்த பைக் அவா் மீது மோதியதில் பலத்த படுகாயமடைந்தாா். சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இந்நிலையில், அங்கு ஆஞ்சியம்மாள் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.