ஜோலாா்பேட்டை அருகே பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
பெரிய மோட்டூா் கூலிக்காரன் வட்டத்தை சோ்ந்த மாட்டு வியாபாரி காளியப்பன்( 65). அவா் கடந்த 5-ஆம் தேதி ஜோலாா்பேட்டை அருகே உள்ள பொன்னேரி பகுதியில் இருந்து தனது வீட்டுக்குச் செல்வதற்காக சைக்கிளில் சென்றாா். அப்போது திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த பைக் காளியப்பன் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விபத்தை ஏற்படுத்திய பைக்கைப் பறிமுதல் செய்தனா். அங்கிருந்து தப்பியோடிய பைக் ஓட்டி குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதனிடையே, காளியப்பன் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது மகன் பெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய நபரைத் தேடி வருகின்றனா்.