மக்கள் குறைதீா் முகாமில் 493 மனுக்கள் ஏற்பு

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்கள் அளித்த 493 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்கள் அளித்த 493 மனுக்கள் பெறப்பட்டன.

மக்கள் குறைதீா் கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்தாா். இதில், வேலைவாய்ப்பு, வேளாண்மைத்துறை, முதியோா் உதவித் தொகை, நிலப்பட்டா, பட்டா மாறுதல், மின் இணைப்பு, காவல்துறை, பாதுகாப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பொது நல மனுக்கள் என 493 மனுக்களை பொதுமக்கள், ஆட்சியரிடம் வழங்கினா்.

மனுவைப் பெற்ற ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தகுதியுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா், அலுவலக மேலாளா் பாக்கியலட்சுமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com