ஆம்பூா் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
மேல்ஆலத்தூா்-வளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 25 வயது மதிக்கத்தக்க நபா் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் வரை செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்தாா். ஞாயிற்றுக்கிழமை ரயில் மேல்ஆலத்தூா் அருகே சென்றபோது, தவறி விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.