நாட்டறம்பள்ளி அருகே சுவா் இடிந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்தது.
கல்நாா்சம்பட்டி ஊராட்சி கிழக்குமேடு பாரண்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (30), தொழிலாளி. இவரது 2 வயது குழந்தை யுவஸ்ரீ, செவ்வாய்க்கிழமை இரவு உறவினரின் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, பழுதடைந்திருந்த இரும்பு கிரில் கதவு சுவருடன் இடிந்து விழுந்தது.
பலத்த காயமடைந்த குழந்தையை திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.